Tuesday, November 16, 2010

காதலும்..... காமமும்!

காதலும்..... காமமும்!


வானத்து நிலவில்.....
வரைந்த ஓவியமே....!
என் காதல் கதையைக்
கேட்டுப்பார்.....

முற்றத்து நிலவில்....
முல்லைப்பந்தல் நடுவில்
முதல் முறை என் கன்னத்தில்
முத்தமிட்ட சுவாசக் காற்றே - என்
முழு இதையத்தையும்
முகாம் ஆக்கி விட்டாய்.

நிலவின் ஒளியில்.....
நீண்ட நதியின் நடுவில்
முதல் முறை என் விழியில்
வித்திட்ட காதல் தேவதையே - என்
முழு இதயத்தையும்
சேமித்து விட்டாய்;.

மலையின் உச்சியில்.....
மாலை வேளையில்
முதல் முறை என் காலடியில்
தரிசனம் தந்த காவல் தேவதையே - என்
முழு இதயத்தையும்
வலை போட்டு விட்டாய்.

கடுங் குளிரில்.....
காம நிலையில்
முதல் முறை என் போர்வைக்குள்
ஆட்சி செய்த அதிபதியே - என்
முழு இதயத்தையும்
சிறைப் பிடித்து விட்டாய்.

கடற்கரை மண்ணில்.....
கண்ட புதுமை
முதல் முறை என் பார்வையில்
பாதம் பதித்திட்ட பாவையே - என்
முழு இதயத்தையும்
திருடி விட்டாய்.

No comments:

Post a Comment