Tuesday, November 16, 2010

வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்?

உன்னை இருட்டில்
நிற்க வைத்து
என் சந்தேகங்களைத்
தீர்த்துக்
கொள்ளவேண்டும்.

வெளிச்சம் என்பது
உன்னிடமிருந்துதான்
வீசிக்கொண்டிருக்கிறதா.

ஆனால்
உன்னை அருகில்
வைத்துக்கொண்டு
இருட்டை நான்
எங்கு தேடுவேன்

சூரியனை
ஒரு முறைகூட
முழுசாகப் பார்த்ததில்லை.

ஆனால் அதுதான்
சூரியன் என்பதில்
எப்போதும்
சந்தேகம் வந்ததில்லை.

உன்னை எத்தனையோ
முறை பார்த்திருக்கிறேன்.

ஆனால் உன்னைப்
பார்த்துக்
கொண்டிருக்கும்போதே
நீ தானா நீ

என்கிற சந்தேகம்
மட்டும் வந்து
கொண்டேதான்
இருக்கிறது

எல்லோரையும் பர்க்க
ஒரு பர்வையென்றும்
என்னை பார்ப்பதற்கு
ஒரு பார்வையென்றும்
வைத்திருக்கிறாய்.

நீ சாய்வதற்கென்றே
வைத்திருக்கும்
என் தோள்களில்
யார்யாரோ தூங்கிச்
சாய்கிறார்கள்

பயணத்தில்.....


என்னை காத்திருக்க
வைக்கவாவது நீ
என் காதலியாக
வேண்டும்.
கடைசி வரை
வராமல் போனால்
கூட ஒன்றுமில்லை

நீ எவ்வளவு
ஒருதலைப்பட்சமானவள்.

நடக்கையில்
சிக்கிக்கொள்ளும் உன்
உடையுடன் சேர்ந்து
என் மனமும்
சிக்கிக்கொள்கையில்,

நீயொ என்னை
விட்டு விட்டு உன்
உடையை மட்டும்
இழுத்துவிட்டுக்கொண்டு
போகிறாயே
அந்தக் காலையில்
திரும்பிக்கூடப்
பார்க்காமல்தான்
என் வாசலைக்
கடந்துபோனாய் நீ. ..

அதனாலென்ன...
வாசலுக்குள் வந்து
எட்டிப் பார்த்துவிட்டுப்
போனதே உன் நிழல்....

சோம்பல் முறிக்கையில்
எவ்வளவு அற்புதமாய்
இருக்கிறாய் நீ.

அம்மாவிடம்
பேசிக்கொண்டிருக்கையில்
எவ்வளவு அழகாய்
இருக்கிறாய் நீ.


அழகான பொருட்களெல்லாம்
உன்னை நினைவுபடுத்துகின்றன,
உன்னை நினைவுபடுத்துகிற
எல்லாமேஅழகாகத்தான்
இருக்கின்றன. .

அதைவிட
என்னிடம் பேசிக்
கொண்டிருக்கையில்
இன்னும் எவ்வளவு
அழகாய் இருப்பாய் நீ.
உன்னிடம் பேச
எவ்வளவு ஆசைப்படுகிறேனோ
அவ்வளவு ஆசை
உன்னிடம் பேசுபவர்களிடமும்
பேசவேண்டும் என்பதில் ...



ஆடம்பரமற்ற உடையில்
சோம்பல் முறித்துக்கொண்டு
உன் அம்மாவிடம்
பேசிக்கொண்டிருப்பதை - உன்
வீட்டு ஜன்னல்
கட்டியதெனக்கு.

No comments:

Post a Comment