Tuesday, November 16, 2010

காதலிக்கத் தூண்டும் கவிதைகள்

Post

நினைப்பாயா?
என்னை நினைப்பாயா?
என்றெண்ணியே,
உன்னை நினைத்து
நினைத்து
பொழுதும் விடிந்தது!




ஒரு குளிர் காலத்தில்
லேசான மழைச்சாரலில்
உன்னுடன் மரத்தினடியில்
அமர்வதுப்போல்
கனவுக்கண்டேன்
கனவில்கூட இத்தனை சுகமா?


காதலிக்கத் தூண்டும் கவிதைகள்

Post


மரணத்தின் வாசல்படி
காதல்!
இறந்தாலும் மீண்டும்
பிறப்பது அதன் அம்சம்!
கொஞ்சம் கொடு
என் மனதின்
சினுங்கலுக்கு அளவில்லை.
கொஞ்சம் காதல்
இருந்தால் கொத்துவிட்டுப் போ!



காதலிக்கத் தூண்டும் கவிதைகள்

Post


ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு வண்ணங்களாகத்
தோன்றுகிறது
உன் புன்னகை!

ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு வண்ண
உடையாக உடுத்த
எனக்கு ஏற்றவை அவை!



காதலிக்கத் தூண்டும் கவிதைகள்

Post


பகலில் சூரியனும்
இரவில் நிலவும்
வெயிலில் மரமும்
பசியில் நதியும்
பழகப் பார்வைகளும்
பறுக முத்தங்களும்
படுக்க மடியும்
பார்க்க விழிகளும்
பதுங்க குடிசையும்
போதுமானது
நம் காதலுக்கு!
அருகில் நீயிருக்கையில்
வேறு தேவையென்ன!


காதலிக்கத் தூண்டும் கவிதைகள்

Post

கடற்கரை மணலில்
வீடுகட்டி விளையாடும்
பிள்ளையாகத் தோன்றுகிறாய்.
தவறுசெய்து என்முன்
நீ நிற்கும்போது!


புன்னகை இல்லா காதல்
இருந்தும் பயனில்லை.
புன்னகையோடு தொடர்ந்த
காதலை,
புன்னகையோடு ரசிப்போம்!
புன்னகையோடு முடிப்போம்!

காதலிக்கத் தூண்டும் கவிதைகள்

Post

சில நேரங்களை
நினைப்பதில்லை.
சில நேரங்களை
மறுப்பதில்லை.
சில நேரங்களை
கவனிப்பதில்லை.
சில நேரங்களை மட்டும்
நினைக்க நினைக்க
இனிக்கும்!
அது பிடித்த உன்
குரலை கேட்பது!

எல்லா உறவுகளும்
ஏதோ ஒருவகையில்
பிறப்பால் தோன்றுகிறது!
காதல் மட்டுமே
மனதால் தோன்றும் உறவு!


காதலிக்கத் தூண்டும் கவிதைகள்

Post

மலைகளின் நடுவில்
நீரூற்றுப் போல
என் இமைகளின்
நடுவில் நகருது
உன் நதி!


உன் அன்பைபெற
என் காதலைக்கொடுத்தேன்!
என் அன்பைபெற
உன் காதலைக்கொடுத்தாய்!
இப்படி அன்பால்
வாழ்வதுதான் காதல்!
வளர்வதுதான் காதல்!

காதலிக்கத் தூண்டும் கவிதைகள்

Post

நீ சிரிக்கும் வேளையில் சிரிக்கிறது,
எனது உதடுகளும்
நீ அழுகும் வேளையில் அழுகிறது,
எனது விழிகளும்,
நீ நினைப்பதைச் செய்யும்
ரோபோ ஆகிவிட்டேன்!
நீ ஆளப்பிறந்தவள்!
நான் ஆடப்பிறந்தவன்!


அன்பை வெளிபடுத்த
துன்பத்தைத் தவிர
வேறு நல்லசந்தர்ப்பம் இல்லை.
உன் அன்பை அழகாக
வெளிபடுத்துகிறாய்!
எனது மனக்கவலையில்!



காதலிக்கத் தூண்டும் கவிதைகள்

Post

கட்டுக்குள் அடங்காதது
நம்காதல் மட்டுமல்ல
நம்கடமையும் தான்!
காதலுக்கு காதலன்
சிலைகளுக்கு சிற்பி!
பானைகளுக்கு குயவன்!
மரங்களுக்கு தச்சர்!
அறிவிற்கு மேதை!
உலகிற்கு கடவுள்!
காதலுக்கு காதலன்!


என் கவலையை
மாற்றிக்கொள்ள
ஒரேவழி
உன் துணைமட்டுமே!

காதலிக்கத் தூண்டும் கவிதைகள்

Post

எதையும் விளையாட்டாக
எடுத்துக்கொள்ளும்
உன்மனதினை
நினைக்கையில் பொறாமையாக
உள்ளது.
எனக்கு அமையவில்லையே
என்று.


காதல் அழகானதுதான்
காதலர்கள் அதை
அழகு படுத்தும்வரை!
காத்திரு அந்த அழகை
அரங்கேற்ற!



No comments:

Post a Comment