Wednesday, February 16, 2011

சிவபெருமான் பற்றி ரகசியம்

சிவன் அவதாரம் எடுத்ததில்லை;தனது அம்சத்தை அனுப்பி அண்டங்களையும் பேரண்டங்களையும் பரிபாலனம் செய்பவர்.அவர் ஆணும் அல்ல;பெண்ணும் அல்ல;அலியும் அல்ல;சர்வ வியாபி.அணுவுக்கும் அணுவாக இருப்பவர்.அவர் ரூபம்,அரூபாரூபம்.அரூபம் என்ற மூன்று நிலைகளிலும் பக்தனின் பரிபக்குவத்திற்குத் தக்கபடி அருளுகிறார்.ஆனால்,அனைத்து மதங்களிலும் அவர் அருட்பெர்ருஞ்சோதி வடிவில் வணங்கப்படுகின்றார்.அவர் முக்குணங்களுக்கு அப்பாற்பட்டவர்.அவரைப் பற்றிய அறிவைப்பெற இந்த சாதாரண மூளையால் சாத்தியப்படாது.யோகிகளும் பக்தர்களும் கூட அவரைப் பார்த்ததில்லை.அவரைச் சுற்ரி கோடிக்கணக்கான சிவபூத கணங்கள் அவர் ஏவலுக்காகக் காத்து நிற்கின்றன.அப்பூத கணங்கள் மூலமாகத்தான் பூமியில் வாழும் 84 லட்சம் ஜீவ ராசிகளுக்கும் ஆகாரம் அளிக்கிறார்.அவரது எளிய வடிவமே பைரவர்.வீட்டில் வைத்து வழிபட ஏற்றவர் சொர்ண பைரவர் தான்.

மாசி மகம் அண்ணாமலை கிரிவலத்தின் மகிமைகள்

மாசி மாதம் அண்ணாமலையில் கிரிவலம் செல்லும் போது வண்டாடி சித்தர்கள் என்பவர்கள்,மனித வடிவில் பறந்து வருவர்.ஆனால்,அவர்களின் வடிவம் ஒரு வண்டின் அளவுக்கு சிறியதாக இருக்கும்.இந்த வண்டாடி சித்தர்களின் கிரிவலப்பயணத்தை தரிசிக்கும் பாக்யம் பெற்றவர்களின் பிரச்னைகள் அடுத்த சில மாதங்களில்(அபூர்வமாக சில நாட்களில்) தீர்ந்துவிடுகின்றன.இந்த ஆண்டு,மாசி மகம் எனப்படும் மாசி பவுர்ணமி 17.2.2011 வியாள க்கிழமையன்று வருகிறது.

நீதித்துறையில் இருப்பவர்கள்,நீதிபதிகள்,வழக்கறிஞர்கள் போன்றோருக்கு நியாயமான பதவி உயர்வுகளையும்,சீரான புகழையும் அளிப்பதுடன் தர்மம்,நியாயம்,சத்தியம் தவறாது நடப்பவர்களுக்கு உரிய தார்மீக ரீதியான கீர்த்தியும்,விருதுகளும் பதவிகளும் மாசி மகத்தன்று அண்ணாமலை கிரிவலம் செல்வதால் கிட்டும்.

கல்வித் துறையில் இருப்பவர்களுக்கும்,மின் அணுத்துறையில் இருப்பவர்களுக்கும் பல்வேறு மேன்மைகளை இந்த மாசி பவுர்ணமி கிரிவலம் தரும்.

பல குடும்பங்களில் கணவன் தன்னுடன் அன்புடன் இருப்பதில்லை என்று ஏங்குகின்ற மனைவியின் ஏக்கத்தை நீக்கிட விரும்பும் இல்லத்தரசிகள் மாசி மாத பவுர்ணமியன்று தனது தாய் தந்தை அல்லது சகோதர சகோதரிகளுடன் அல்லது மகன் மகளுடன் கிரிவலம் வரலாம்.அப்படி ஒரே ஒருமுறை மாசிமகத்துக்கு கிரிவலம் வந்தாலே கணவனின் பூரண அன்பு கிடைக்கும்.

கலப்படம் செய்பவர்கள்,கொடுத்த கடன்கள் திருப்பி வராததால் நொடித்திருப்போருக்கு அவர்களின் சொல்ல முடியாத முன் ஜன்மவினைகளே காரணம்.அந்த முன் ஜன்ம வினைகள் நீங்கவும்,பிறருடைய சொத்துக்களை அபகரித்தவர்கள் மனம் திருந்தி வாழவும் ,குடும்பத்தில் அழுத்தும் நீண்ட காலக்கடன்கள் தீரவும் இந்த மாசி மாத பவுர்ணமியன்று 17.2.2011 வியால க்கிழமையன்று திரு அண்ணாமலைக்கு கிரிவலம் செல்ல வருக! வருக!! வருக!!!

அண்ணாமலைக்கு வருக! அனைத்துவித வளங்களும் பெறுக!!!